பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்தின் மாடிப்படியில் தவறி விழுந்த கமலஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமலஹாசனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. தற்போது அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்பால் எப்போதும், எந்த நிலையிலும் என்மீது அன்பு காட்டும் ரசிகர்களுக்கு அன்பு வணக்கம். சிறிய விபத்தா?, பெரிய விபத்தா? ஆபத்தா?, என்று பல கேள்விகளுடன் பலர் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்பை பார்த்து நான் வியப்படைவதை தவிர வேறென்ன செய்ய முடியும். இத்தனை அன்புக்கும் பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை. அன்பும் என் கலையும்தான். அதை செய்ய நான் ஏற்ற பாத்திரங்களும்தான்.
எனக்கு நடந்தது நல்லதோ, கெட்டதோ அதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. வெற்றிகளும், விபத்துகளும் என் கதையில் விசித்திரமல்ல. சில இடர்பாடுகளை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துக்களை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இந்த விபத்தே சான்று.
ஆயிரம் வேலைகள், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கும்போது இந்த விபத்து நடந்திருக்க வேண்டாமே. ஆனால் நல்ல மருத்துவர்கள், அவர்களது உதவியாளர்கள், என் சிறு குடும்பமும் உடன் இருந்து கவனித்துக் கொண்டதில் நான் குறையின்றி இருக்கிறேன்.
எப்படி இருக்கிறீர்கள்? எப்போது பார்க்கலாம் என கேள்வி கேட்கும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பதில் சொல்ல விரைவில் நலம் பெற்றுத் திரும்புவேன். எழுந்து, அமர்ந்துதான் இந்த அறிக்கையை எழுதுகிறேன். விரைவில் நடந்து வந்து பதில் சொல்வேன். இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்