புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
என்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; என் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நடிகர் சூர்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மலேஷியா தமிழ் பத்திரிகையில், மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா என்ற நிகழ்ச்சியில், நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தி, சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இப்படி ஒரு நிகழ்ச்சியை பற்றிய எந்த தகவலும் எனக்குத் தெரியாது; அதில் கலந்து கொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள், ஜாதி, மதம், மொழியை கடந்தவர்கள். நான், மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன். பணம் வாங்கி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உடையவன். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை.
மலேஷியாவில் நடைபெறுவதாக சொல்லப்படும் மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழாவிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாக பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவது, எனக்கு வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு கொண்ட அனைவரும், இது போன்ற தவறான நோக்கத்தோடு வெளியாகும் செய்திகளை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.