பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், நாசர் நடித்து தெலுங்கில் ஹிட்டான பலுப்பு படத்தை தமிழில், எவன்டா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். செல்வந்தன், புரூஸ் லீ 2, படங்களை வெளியிட்ட பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இதனையும் வெளியிடுகிறார்.
கோபி சந்த் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார், வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் பாடல்களை அருண் பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம் எழுதி உள்ளனர். தமிழ் வசனங்களை ஏஆர்கே.ராஜராஜா எழுதியுள்ளார்.
திருமணமே வேண்டாம் என்று திரியும் மகனுக்காக பல பெண்களை பார்த்து பலுப்பு வாங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்படி அவர் பார்க்கும் பெண்கள்தான் அஞ்சலி, ராய் லட்சுமி. மூன்றாவதாக ஸ்ருதி ஹாசனை பிடிக்கிறார். அவர் ஒரு வில்லங்க பார்ட்டி, அவரால் ஒரு பிரச்சினை அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ரவிதேஜாவுக்கும் வருகிறது. அது என்ன பிரச்சினை, அதை எப்படி சமாளித்தார்கள். ரவிதேஜா யாரை திருமணம் செய்கிறார் என்கிற கதை. காமெடி. ஆக்ஷன், 3 ஹீரோயின்களின் கிளாமர் என கலர்புல் மசாலா படம்.