அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனு கிருஷ்ணா. பின்னர், வெள்ளக்காக்கா மஞ்சக்குருவி, இரு காதல் ஒரு கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்த அனு கிருஷ்ணா, தற்போது இளமி, இட்லி போன்ற படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி...
தற்போது நான் இளமி, இட்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் இளமி படம் படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இளமி என்கிற டைட்டீல் ரோலில் நான் நடித்திருக்கிறேன். சாட்டை யுவன் நாயகனாக நடித்துள்ளார். பாகுபலி படம் போன்று 18-ம் நூற்றாண்டு சரித்திர கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டுதான் இப்படத்தின் மையக்கரு. அந்த வகையில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் தயாராகியிருக்கிறது.
இதில் நான் அந்த காலகட்டத்து பெண்ணாக இளமி என்கிற லீடு ரோலில், தசாவதாரம் படத்தில் அசின் அணிந்தது போன்று உடையணிந்து நடித்திருக்கிறேன். இது எனது கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். இதற்கு முன்பு நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதில் விஜய் சாருடன் நடித்த கத்தி படம்தான் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அந்த படத்தில் விஜய் சாருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அவருக்கு தங்கையாக அந்த வேடத்தில் நடித்தபோது, எனக்கு அவர் நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்தார். அதோடு, அந்த படத்தில் நான் கமிட்டானபோது, விஜய் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். அமைதியாக இருப்பார் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், நான் முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது நான்தான் அவருக்கு தங்கையாக நடிக்கப்போகிறேன் என்றது தெரிந்ததும் என்னை அழைத்து நிஜ அண்ணன் போலவே பேசினார். அன்பாக பழகினார். அதுமட்டுமின்றி,ரொம்ப கலகலப்பாக இருந்தார். விஜய் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்று மற்றவர்கள் சொன்னதை வைத்து முதலில் நானும் அவரைவிட்டு தள்ளியே நின்றேன். ஆனால் பின்னர் அவர் கலகலப்பாக பேசியதைப்பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்ததோடு, நானும் சகஜமாக பேசத் தொடங்கிவிட்டேன்.
மேலும், நான் கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தபோதும், எனக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் எப்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கினேனோ அப்போதே அவருடன் எப்படியேனும் டூயட் பாடி விட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வந்தது. ஆனபோதும் கத்தியில் என்னை விஜய்க்கு தங்கையாக நடிக்க அழைத்தபோது நான் அதை தவிர்க்க நினைக்கவில்லை. மாறாக, இது முதல் படி. இதன்பிறகு அவருடன் டூயட் பாடி விடலாம் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி சாரை ரஜினி அங்கிள் என்று அழைத்தபடி ஒரு சிறிய பெண்ணாகத்தான் நடித்திருந்தார் மீனா. அதன்பிறகு அவரே எஜமான், முத்து படங்களில் ரஜினிக்கு ஜோடியாகி விட்டார். அதனால் அவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்தது போன்று நானும் எதிர்காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பேன். அதற்கான முயற்சியை இப்போது எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அனுகிருஷ்ணா.