பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இப்போதே அவர்கள் பணியை தொடங்கிவிட்டாலும் முறைப்படி பொதுக்குழு முன் அவர்கள் பதவியேற்க வேண்டும். இதற்காக விரைவில் பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார்கள். இந்த மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமை (25ந் தேதி) அல்லது அடுத்த மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1ந் தேதி) பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் உள்ள 3139 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. சென்னை காமராஜர் அரங்கம் அல்லது வானகரத்தில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபம் ஆகியவற்றில் பொதுக்குழு கூடும் என்கிறார்கள். இந்த பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கிறார்கள். அதோடு அடுத்த 3 ஆண்டுக்கான புதிய செயல் திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.
அவற்றில் முக்கியமானவை வருமாறு:
1.நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதி திரட்டல் திட்டம்.
2.நடிகர் சங்கத்தின் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் சம்பந்தப்பட்டவர்களை வாபஸ் பெற வைப்பது.
3.சங்க உறுப்பினர்கள் பட்டியலை முறைப்படுத்துவது. நடிகர்கள் அல்லாத உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்குவது, நிஜமான நடிகர்களை உறுப்பினராக்குவது. உறுப்பினர்கள் பற்றி தகவல்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது.
4.சரத்குமார் அணி சார்பில் 4 செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவது.
5.நலிந்த கலைஞர்கள் பெற்று வரும் சலுகைகளை உயர்த்துவது.
இந்த 5 அம்சங்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.