ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில் லியோ படத்தில் நடித்த கதாநாயகி த்ரிஷா மற்றும் நடிகைகள் பற்றி ஆபாசமாகப் பேசியிருந்தார். அந்த பேச்சு குறித்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் த்ரிஷா. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட மற்ற சினிமா பிரபலங்களும் மன்சூரலிகானுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை : மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும், சாதிப்பதும் இன்னமும் சவாலகவே இருக்கும் இன்றைய சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளை தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.
நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய அவரின் இந்த போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக் கொள்ள வேண்டும். தான் உதிர்க்கும் கருத்துக்களும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும். அந்த உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். அதுவரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்க கூடாது என்று நடிகர் சங்கம் கருதுகிறது. வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும்.
இந்த தனி நபர் விமர்சனம் மட்டுமல்லாது வெகுநாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல பொய் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கி கொள்கின்றனர். இதில் சோகமும், கோபமும் இத்துறை சாந்தவர்களே அவற்றை தொகுத்து வழங்குவதுதான். மென்மை உள்ளம் படைத்தவர்கள் என்பதால் ஒவ்வொருமுறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.