‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
புதுமுக டைரக்டர் ஜெயக்குமார் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் கனல். இந்த படத்தில் பவீனா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கமுத்து, ரமேஷ்கண்ணா ஆகியோர் காமெடியன்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் காமெடி போலீசாக நடித்துள்ள அவர்கள் இருவரும் காமெடி ட்ராக்கில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்களாம்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏலகிரி மலைப்பகுதியில் நடைபெற்றபோது, ஒருநாள் அங்குள்ள அருவியில் குளிக்கிற காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாராம் பவீனா. அப்போது ஒரு பெரிய மரத்தில் சென்று கொண்டிருந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இவர் குளித்துக்கொண்டிருந்த இடத்தில் தேங்கிக்கிடந்த தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்ததாம்.
அதைப்பார்த்து அதிர்ந்து போன பவீனா அந்த இடத்திலேயே மயங்கி சாய்ந்து விட்டாராம். இதனால் அவரை அங்கிருந்து தூக்கிசென்று முதல் உதவி சிகிச்சை அளித்து மயக்கம் தெளிய வைத்திருக்கிறார்கள. ஆனபோதும் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் அன்றையதினம் நடிக்கிற மூடில் அவர் இல்லாததால் அவரை தங்குமிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு மற்ற காட்சிகளை படமாக்கினாராம் டைரக்டர் ஜெயக்குமார்.