பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் பின்னணி பாடிக்கொண்டிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதன்பிறகு ரஜினி, கமலுக்கு பாடியவர், பிறகு வந்த விஜய்-அஜீத்துக்கும் பாடினார். இப்போதும் சில படங்களுக்கு பாடிக்கொண்டிருக்கிறார். சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், சமீபகாலமாக மார்க்கெட்டில் இருக்கும் சில வடக்கத்திய பாடகர்கள் ஒரு பாடல் பாடுவதற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதோடு மும்பையில் இருந்து அவர்கள் சென்னைக்கு வந்து செல்ல பிளைட் டிக்கெட், தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனியர் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னை யாராவது இசையமைப்பாளர்கள் பாட அழைத்தால், அவர்களிடம் இந்த தொகை தந்தால்தான் பாடித்தருவேன் என்றெல்லாம் பேசுவதில்லையாம். உங்களால் என்ன முடியுமோ கொடுங்கள். என் வேலையை நான் திறம்பட செய்து தருகிறேன் என்றுதான் சொல்கிறாராம். சிலர் நாங்கள் பண்ணுவது சின்ன பட்ஜெட் படம் என்று இழுத்தால், அப்படியென்றால் சின்ன தொகையை எனக்கு கொடுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தனது பெரிய மனதை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துகிறாராம்.