படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
அம்புலி 3டி படத்தை தொடர்ந்து இரட்டை இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் தற்போது ஆ என்ற படத்தை இயக்கி வருகிறார்கள். அம்புலி படத்தில் நடித்த கோகுலே இதிலும் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இந்த மூவரும் இணையும் அடுத்த படம் ஜம்போ 3டி. இதனை ஹரியும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கே ஒக்கிடாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஸ்ரீ வித்யா இசை அமைக்கிறார். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோகுலுடன் பேபி ஹம்சிகா ஹரி நடிக்கிறார்.
இதன் துவக்க விழா நடந்தது. இதில் இந்திய ஜப்பான் கலாச்சார தூதர் கயோலா புருகொவா கலந்து கொண்டார் அவர் கூறியதாவது: "இந்தப் படம் இந்திய ஜப்பானிய கூட்டுத் தயாரிப்பு. தமிழ் திரைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமை. எங்கள் நாட்டின் பெருமை மிகு இயக்குனர் அகினோகுரோசேவோ நினைவாக சென்னையில் கண்காட்சி நடத்த இருக்கிறோம்" என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஜி. ஹரி கூறியதாவது: தமிழ் நாட்டு மக்களின் பின்னணியை ஜப்பானிய மக்கள் திரைப்படங்கள் வாயிலாக அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் படங்களுக்கு ஜப்பானில் தனி மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை எடுக்கிறோம். டோக்கியோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இதனை நான் லட்சியமாக கொண்டிருக்கிறேன். 90 சதவிகித படப்பிடிப்பு ஜப்பானில் நடக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பி.வாசு, கங்கை அமரன் நடிகைகள் சுகன்யா, நமீதா, ஒய்.ஜி.மகேந்திரன், நடன இயக்குனர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.