கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் |
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக நடிகர் விஷால் தனது வீட்டிலிருந்து ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். தன்னிடமிருந்த அனைத்து கார்களையும் விற்று விட்டதாகவும் விளக்கமும் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.
ஒரு நாள் மாலை படப்பிடிப்பு முடிவடைந்ததும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக காரில் கிளம்புவதற்கு பதிலாக தனது உதவியாளருடன் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், “நீங்கள் வீடு திரும்புவதற்கான ஒரு வழியை எப்போதும் கண்டுபிடிக்கும்போது அது மற்ற விஷயங்களை விட சுவாரஸ்யமானதாக இருக்கும். மும்பை வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.