பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சுந்தர். சி இயக்கம், நடிப்பில் வெளியாகி உள்ள ‛அரண்மனை 4' படம் வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைக்கு வந்து மூன்று நாட்களில் 34 கோடி வசூலித்திருக்கிறது. இதனால் சுந்தர் சி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி உள்ளனர். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி உள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார் சுந்தர். சி.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் மீண்டும் இந்த மூன்றாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு கலகலப்பு படத்தின் முதல் இரண்டு பாகங்களை போலவே இந்த மூன்றாம் பாகமும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் உருவாக போகிறதாம்.