முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்கிற சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா நல்காரி. முன்னதாக கணவருக்காக சீதாராமன் தொடரிலிருந்து வெளியேறிய அவர், கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் நளதமயந்தி சீரியலில் கமிட்டானார். தற்போது கணவருடன் சமாதனம் ஏற்பட்டு அண்மையில் பிரியங்கா தனது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடினர்.
இதனிடையே நளதமயந்தி தொடரின் கதைக்களம் மாற்றப்பட்டு நடிகை ஸ்ரீநிதி இனி லீட் ரோலில் நடிக்க உள்ளார். தமயந்தி கதாபாத்திரத்தின் தங்கையாக ஸ்ரீநிதி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமயந்தி கதாபாத்திரமும் இனி தொடராதது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய புரோமோவை நடிகை ஸ்ரீநிதி தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் பிரியங்கா நல்காரி ஏன் சீரியலை விட்டு விலகினார் என்று கேட்டு வருகிறார்கள். இதை பார்த்து ஷாக்கான பிரியங்கா, ‛நான் சீரியலை விட்டு விலகவில்லை. லீவு தான் எடுத்திருக்கிறேன். அடுத்த ஷெட்யூலுக்காக காத்திருக்கும் போது இது எப்படி ஆனது என்று எனக்கே தெரியவில்லை. இதற்கெல்லாம் விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.