பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்கிற சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா நல்காரி. முன்னதாக கணவருக்காக சீதாராமன் தொடரிலிருந்து வெளியேறிய அவர், கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் நளதமயந்தி சீரியலில் கமிட்டானார். தற்போது கணவருடன் சமாதனம் ஏற்பட்டு அண்மையில் பிரியங்கா தனது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடினர்.
இதனிடையே நளதமயந்தி தொடரின் கதைக்களம் மாற்றப்பட்டு நடிகை ஸ்ரீநிதி இனி லீட் ரோலில் நடிக்க உள்ளார். தமயந்தி கதாபாத்திரத்தின் தங்கையாக ஸ்ரீநிதி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமயந்தி கதாபாத்திரமும் இனி தொடராதது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய புரோமோவை நடிகை ஸ்ரீநிதி தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் பிரியங்கா நல்காரி ஏன் சீரியலை விட்டு விலகினார் என்று கேட்டு வருகிறார்கள். இதை பார்த்து ஷாக்கான பிரியங்கா, ‛நான் சீரியலை விட்டு விலகவில்லை. லீவு தான் எடுத்திருக்கிறேன். அடுத்த ஷெட்யூலுக்காக காத்திருக்கும் போது இது எப்படி ஆனது என்று எனக்கே தெரியவில்லை. இதற்கெல்லாம் விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.