புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவர்களுக்கு கடிதம் எழுதி ஃபோட்டோ கேட்டு அதை மற்றவர்களிடம் காண்பித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மனம் கவர்ந்த நட்சத்திரங்களுக்கு ஃபோன் செய்து பேசினால் கூட அவர்களுடைய உதவியார்கள் மட்டுமே பேசுவார்கள். ஆனால் தற்போது நட்சத்திரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்துவிட்டன.
அதிலும் தங்கள் நட்சத்திரங்களை எங்காவது பார்த்தால் அவர்களுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் ஏற்றி அதிகமான 'லைக்' வாங்க வேண்டும் என்ற ஆவல் சராசரி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. பல நடிக, நடிகையரும் ரசிகர்களின் புகைப்படம் எடுக்கும் ஆவலை தடுப்பதில்லை. ஆனால், நடிகை டாப்ஸீக்கு ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்கிறார். “ சில ரசிகர்கள்தான் மிகவும் மரியாதையாக அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதே போல் என்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தவறான, ஆபாசமான டுவிட்டர்களைப் பதிவிடுபவர்களை தடை செய்துவிடுவேன். மேலும், என்னுடன் புகைப்படம் எடுக்கும் போது என் தோள் மீது கை போடுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அது போன்று செய்பவர்களைக் கண்டால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது, ” என்று தெரிவித்துள்ளார்.
அதனால், ரசிகர்களே இனி டாப்ஸீயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டால் பார்த்து எடுங்கள்...