மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் சுரேஷ்கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'ஜேஎஸ்கே' அதாவது 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற படம் வெளியானது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு இளம் பெண் அந்த கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என தெரியாத நிலையில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது போன்று இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் கதாநாயகியாக நடித்த அனுபமாவின் பெயர் ஜானகி.
ஆனால் படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட போது படம் பார்த்த அதிகாரிகள் ஜானகி என்கிற பெயரை டைட்டிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் படத்தில் ஜானகி என வரும் இடங்களில் அந்த வார்த்தையை மியூட் செய்ய வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டனர். சில வார போராட்டங்களுக்குப் பிறகு இரு தரப்பிலும் ஒரு சமரசம் ஏற்பட்டு ஜானகி என்பதற்கு முன்பாக 'வி' என்கிற எழுத்தை சேர்த்து 'வி ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
இந்த நிலையில் இதேபோன்று தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உருவாகியுள்ள ஜானகி என்கிற படமும் இதே டைட்டில் சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளது. சத்தீஸ்கர் மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது ஹிந்திக்கு மாற்றப்பட்டு சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் முதலில் பல காட்சிகளுக்கு கட் சொல்லிவிட்டு அதன் பிறகு 'யுஏ 16 பிளஸ்' சான்றிதழ் வழங்கலாம் என கூறினார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களை செய்து வந்தபோது சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் டைட்டிலில் இடம்பெறும் ஜான்கி என்கிற வார்த்தை ராமாயண நாயகி சீதாவை குறிப்பதாகவும் அதேபோல படத்தின் நாயகனாக ரகுராம் என்கிற பெயர் இருப்பதால் அது ராமனை குறிப்பதாகவும் கூறி இந்த இரண்டு பெயர்களையும் மாற்றும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நீதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.