தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பஹத் பாசில் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ஆவேசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அதைத் தொடர்ந்து 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வடிவேலு, பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'ஓடும் குதிரை சாடும் குதிரை' படப்பிடிப்பு முடிந்து அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதே சமயம் கடந்த வருடம் பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'கராத்தே சந்திரன்' திரைப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதன்பிறகு வெளியாகவில்லை.. ஒருவேளை அந்த படம் கிடப்பில் போடப்பட்டதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பஹத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு சரிவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் தான் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.