வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' |

தென்னிந்திய அளவில் தற்போதும் நம்பர் ஒன் கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா தான். அவரைப் பற்றி சமீப காலமாக பல சர்ச்சையான செய்திகள் வெளியாவதை தான் பார்க்க முடிகிறது. அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் யோகி பாபு, நயன்தாரா பற்றி கூறிய விஷயம் ஒன்று ரொம்பவே ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' என்கிற படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, அந்த படத்தில் கதையின் நாயகன் என்றால் யோகி பாபு தான். முதலில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகருக்கு ஜோடி என்பது போல இணைந்து நடிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். ஆனால் யோகிபாபு சாதாரண நடிகர் என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லையாம். அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை யோகி பாபு சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
''ஒரு காட்சியில் வாகனத்தில் செல்லும்போது அது ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும்போது நயன்தாராவின் கால் என் முகத்தில் வந்து உதைப்பது போல படமெடுக்க வேண்டும். ஆனால் எவ்வளவு சொல்லியும் நயன்தாரா என் முகத்தில் தன்னுடைய காலால் உதைப்பதற்கு, அவ்வளவு ஏன் காலால் முகத்தில் தொடுவதற்கு கூட முடியாது என்று பிடிவாதம் காட்டினார். ஆனாலும் நெல்சன் இந்த காட்சி ரொம்பவே முக்கியமானது, நன்றாக வரும் என்று சொன்ன பின்னர் தனது கால்களை சுத்தப்படுத்தி அதில் வாசலைன் தடவிக் கொண்டு அந்த காட்சியில் என் முகத்தில் கால் பட்டும் படாமல் படுவது போல வேறு வழி இன்றி நடித்தார் நயன்தாரா. அப்போது கூட தனது காலில் இருக்கும் தூசி என் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தார் நயன்தாரா'' என்று பிரமிப்பு விலகாமல் கூறியுள்ளார் யோகி பாபு.




