ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இன்று வெளியான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. கடந்த 2007ல் அமீர்கான் நடித்து இயக்கி வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஆர் எஸ் பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான், சித்தாரே ஜமீன் பர் படக்குழுவினரை அவர்களது செட்டுக்கு நேரில் வந்து சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இவர்கள் மூவருமே எந்தவித பந்தாவும் ஈகோவும் இன்றி ஒருவரது படத்தை மற்றொருவர் பாராட்டுவதுடன் அவர்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதை ஷாருக்கான் இப்போதும் நிரூபித்துள்ளார்.