என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பாலிவுட்டில் முன்னாள் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரிஷ்மா கபூர். அவருக்கும் தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்து பின் விவாகரத்து பெற்றனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சஞ்சய் மரணம் அடைந்தார். தேனீ ஒன்று அவருடைய வாய் வழியே மூச்சுக்குழாயில் புகுந்ததே மாரடைப்புக்குக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சஞ்சய் கபூரின் உடல் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் சஞ்சயின் உடலுக்கு தனது மகன், மகள், தங்கை கரினா கபூர், இவரது கணவர் நடிகர் சைப் அலிகான் ஆகியோருடன் சென்று கரிஷ்மா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கரிஷ்மாவுக்கு முன்னதாகவே நந்திதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடங்களில் அவரைப் பிரிந்துள்ளார் சஞ்சய். கரிஷ்மாவுடன் 11 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர், மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார்.