நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடித்துள்ள 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கண்ணப்பா' படமும் வரும் ஜூன் 27ல் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு பக்கம் இருக்க மோகன்லால், மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த வரும் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் எட்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெறத் துவங்கியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மோகன்லால் இலங்கை கிளம்பி சென்றார். அங்கே அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நேற்று நடைபெற்ற இலங்கை பார்லிமென்டில் நிகழ்வுகளை நேரில் பார்க்கும் விதமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மோகன்லால். பார்லிமென்டில் அவர் பெயர் சொல்லப்பட்டு அவருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமர சூர்யா, சபாநாயகர் டாக்டர் ஜெகத் விக்ரமாநாயகெ, துணை சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலிஹ் மற்றும் பார்லிமென்டில் பொது செயலாளர் குஸாணி மோகனதீரா ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மோகன்லால்.