எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதாக அடிக்கடி மோசடி புகார் வரும், இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் அடிக்கடி எச்சரிக்கை செய்யும். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அக்ஷரா ஹாசன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இப்ராகிம் அக்தர் என்ற நபர் என்னுடைய பெயர் மற்றும் என் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஊட்டி பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், எங்களது பெயரை பயன்படுத்தி, நாங்கள் சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் அனைத்தும் தவறானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தயவுசெய்து எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.