அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதாக அடிக்கடி மோசடி புகார் வரும், இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் அடிக்கடி எச்சரிக்கை செய்யும். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அக்ஷரா ஹாசன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இப்ராகிம் அக்தர் என்ற நபர் என்னுடைய பெயர் மற்றும் என் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஊட்டி பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், எங்களது பெயரை பயன்படுத்தி, நாங்கள் சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் அனைத்தும் தவறானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தயவுசெய்து எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.