என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கியவர் கோபி நயினார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதனை இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் கம்பெனி தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படம் அரசுகளை, குறிப்பாக காவல் துறையை மோசமாக சித்தரித்துள்ளதாக கூறி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் எந்த காட்சிகள், எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிடவில்லை' என்று வெற்றி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று தணிக்கை குழு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஆட்சேபத்திற்குரிய காட்சிகள், வசனங்கள் பற்றி படத்தின் தயாரிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும், அதனை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று குறிப்பிடாமல் எப்படி அந்த காட்சிகளை எப்படி மாற்றி அமைக்க முடியும். தணிக்கை குழு படத்தை பார்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்களை தயாரிப்பாளருக்கு சுட்டிக் காட்ட வேண்டும். என்று அறிவுறுத்தி விசாரணையை வருகிற 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது.