விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனங்களில் தமிழ் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் பஹல்காமில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எழுதியிருப்பதாவது:
ஒரு காலத்தில் நானும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்து விட்டேன். அதேவேளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.
நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். என்று எழுதியுள்ளார்.
ஆண்ட்ரியாவின் இந்த கருத்தை வரவேற்று பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.