பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தசமயம் பல பிரபலங்களும் தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் பாகிஸ்தானில் வாழும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது அறிக்கை விமர்சிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்கள் வாழ்வதாக அவர் தெரிவித்திருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு என்று குறிப்பிட்டு, ‛‛காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்'' என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.