என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தசமயம் பல பிரபலங்களும் தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் பாகிஸ்தானில் வாழும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது அறிக்கை விமர்சிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்கள் வாழ்வதாக அவர் தெரிவித்திருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு என்று குறிப்பிட்டு, ‛‛காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்'' என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.