கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.. தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள இவரது வீட்டின் முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வைக்கும் ஒருவரின் மகன் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். காரை நீண்ட நேரமாக எடுக்காமல் இருந்ததால் இதுகுறித்து தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பினரும் இந்த வழக்கில் தாங்கள் சமரச உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்துள்ளதாகவும், ஆதலால் தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.