என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடரும் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பொதுவாக இப்போது இருக்கும் மலையாள ஹீரோக்களில் சண்டைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களை வசீகரிப்பதில் இப்போதும் மோகன்லால் தான் முதலிடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவரது படங்களில் தொடர்ந்து சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்த தொடரும் படத்திலும் ஸ்டண்ட் சில்வா தான் பணியாற்றியுள்ளார்.
கிளைமாக்ஸுக்கு முந்தைய அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று சண்டைக்காட்சிகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. மூன்றுமே விறுவிறுப்பாகவும் கதையின் போக்கில் இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களிடம், “அவர்களை விடாதே.. அடி” என்று உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன ஸ்டண்ட் சில்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “தொடரும் படத்திற்கும் படத்தில் என்னுடைய வேலைக்கும் கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்களை பார்த்து மகிழ்ந்து போயிருக்கிறேன். மோகன்லால் சாருக்கும் மொத்த படக்குழுவிற்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.