2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோர் பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி கையால் பெற்றனர்.
நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.
இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கும், தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டில்லியில் முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.
அஜித் குமார்

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித் குமார்(53) இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். சினிமா தவிர்த்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார்.
பாலகிருஷ்ணா

மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா(64) தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார்.
சேகர் கபூர்

ஹிந்தி சினிமாவின் இயக்குனரும், நடிகருமான சேகர் கபூர்(79) தமிழில் கமலின் விஸ்வரூபம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.




