ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா |

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் ஏறக்குறைய சமகாலத்தில் அறிமுகமாகி ஒன்றாக வளர்ந்து போட்டி நடிகர்களாக உயர்ந்தார்கள். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போல அடுத்து அஜித் - விஜய் என்ற போட்டி கடுமையாக இருந்தது. இவர்களது காலத்தில் சமூக வலைத்தளங்கள் வளர்ந்ததால் அதில் இருவரது ரசிகர்களும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது.
விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, தீவிர அரசியலில் இறங்கும் சூழ்நிலையிலும் இருவரது ரசிகர்களுக்குமான மோதல் இன்னும் தீரவில்லை. நேற்று அஜித் பத்மபூஷன் விருது வாங்கிய நிலையில் நேற்று காலை முதல், அஜித் பற்றிய பழைய கிசுகிசு ஒன்றை விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே வைரலாகப் பரப்பினார்கள் என அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். பதிலுக்கு அஜித் ரசிகர்களும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமெண்ட்டுகளை பதிவிட்டார்கள். அவரது பழைய காதல், தற்போதைய காதல் என நிலவரம் கலவரமாகவே இருந்தது.
அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் வந்தன. ஆனால், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜய், அஜித்துக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இருந்தாலும், அவர் தனிப்பட்ட விதத்தில் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் என்று செய்திகள் வந்தன.
எதற்கெடுத்தாலும் பலவற்றிற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த விஜய், இதற்கு மட்டும் வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி இன்றும் தொடர்கிறது. நேற்று அஜித் பத்மபூஷன் விருது பெற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்திலாவது விஜய் வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.
சினிமா போட்டி என்பது வேறு, அரசியலில் வந்த பிறகு சொல்வதில் என்ன தயக்கம் ?.