நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாள சினிமா உலகில் வசூல் நாயகன் என்ற பெயரை எடுத்து வருகிறார் மோகன்லால். அவர் நடித்து மார்ச் மாதம் வெளியான 'எல் 2 எம்புரான்' படம் மலையாள சினிமா உலகில் அதிக வசூலாக 250 கோடியைக் கடந்தது. அப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக 'தொடரும்' படம் வெளிவந்தது.
தருண்மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்று நாட்களில் 69 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். மோகன்லால் நடித்து அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படமும் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மோகன்லால் தான் மலையாளத் திரையுலகத்தில் முதன் முதலில் 100 கோடி வசூலைப் பெற்ற கதாநாயகன். அவர் நடித்து 2016ல் வெளிவந்த 'புலிமுருகன்' படம்தான் மலையாளத்தில் முதல் 100 கோடி படம்.
அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'லூசிபர் (2019), எல் 2 எம்புரான் (2025) ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்தன. 'தொடரும்' படமும் 100 கோடியைக் கடந்தால் அது மோகன்லாலில் 4வது 100 கோடி படமாக அமையும்.
2013ல் வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் மூலம் மலையாளத்தில் 50 கோடி வசூலைப் பெற்ற முதல் கதாநாயகனும் மோகன்லால் தான்.