எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. இவர் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஆனால் அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்தவர். 13 வருடமாக காதலித்து வந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கும் அபிநயாக போன்று பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடையவர்.
இதுகுறித்து அபிநயா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛நாடோடிகள் படத்தின் தெலுங்கு பகுதிப்பில் தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு தெலுங்கில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இதனால் என்னை போன்ற குறைபாடு உடையவர்கள் இணைந்து ஒரு குரூப்பை உருவாக்கினோம். அந்த குரூப் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் கார்த்திக்.
அவரும் என்னை மாதிரியே பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர்தான். அவங்க அக்காவோடுதான் வந்திருந்தார். அவங்க அக்காவும் அதேமாதிரி சவால் கொண்டவர்தான். ரெண்டு பேருமே என்கிட்ட பாசமா பேசி ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. இந்த உலகத்திலேயே எனக்கு அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அம்மாவோட பாசத்தை அவர்கிட்ட உணர்ந்தேன். அதுதான், எங்க நட்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக வெச்சது.
அவரோட குணம் எங்க குடும்பத்துல எல்லோருக்குமே பிடித்திருந்தது. அதனாலதான் வெவ்வேறு சமூகத்தினராக இருந்தாலும் ரெண்டு வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க. கார்த்திக் ஒரு பிசினஸ் மேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில டைரக்டரா இருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு பிறகுதான் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் அம்மா இறந்து விட்டதால் தனிமையை போக்க திருமணம் செய்து கொண்டேன்'' என்கிறார்.




