இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
‛நாடோடிகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் நடிப்பில் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடிக்கிறார். விஷாலும், இவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இதுபற்றி ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், ‛‛விஷால் எனக்கு காதல் புரொபஸ் பண்ணாரு, திருமணம் செய்யப்போறோம் என தப்பான செய்திகள் பரப்புறாங்க, அதையெல்லாம் நம்பாதீங்க, அது எதுவுமே உண்மையில்லை, முட்டாள்தனமானது. அவுங்க ஏதோ வயித்து பிழைப்பிற்காக பேசுறாங்கனு விட்டுவிடுவேன். என்னவேணா சொல்லுங்க, நான் பெரிதாக எதையும் கண்டுக்கொள்வதில்லை'' என்றார்.
மேலும் ‛‛நான் ஒரு ரிலேசன்ஷிப்பில் இருக்கிறேன். எனக்கு பாய் பிரண்ட் இருக்காரு, 15 வருடம் அவரை தெரியும். சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பர். நாங்க பேசி பழகுனோம் அதன்பின் காதல் ஆனது. நல்ல மனிதர். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்றார்.