தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' |

‛நாடோடிகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் நடிப்பில் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடிக்கிறார். விஷாலும், இவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இதுபற்றி ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், ‛‛விஷால் எனக்கு காதல் புரொபஸ் பண்ணாரு, திருமணம் செய்யப்போறோம் என தப்பான செய்திகள் பரப்புறாங்க, அதையெல்லாம் நம்பாதீங்க, அது எதுவுமே உண்மையில்லை, முட்டாள்தனமானது. அவுங்க ஏதோ வயித்து பிழைப்பிற்காக பேசுறாங்கனு விட்டுவிடுவேன். என்னவேணா சொல்லுங்க, நான் பெரிதாக எதையும் கண்டுக்கொள்வதில்லை'' என்றார்.
மேலும் ‛‛நான் ஒரு ரிலேசன்ஷிப்பில் இருக்கிறேன். எனக்கு பாய் பிரண்ட் இருக்காரு, 15 வருடம் அவரை தெரியும். சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பர். நாங்க பேசி பழகுனோம் அதன்பின் காதல் ஆனது. நல்ல மனிதர். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்றார்.




