சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

உலகின் மிகப்பெரிய இசை கோர்வையாக கருதப்படும் சிம்பொனி இசையை இளையராஜா நிகழ்த்தி சாதனை படைத்தார். தற்போது இளையராஜா போன்றே சிம்பொனி இசை அமைக்க இருக்கிறார் கணேஷ் பி.குமார்.
சென்னையைச் சேர்ந்த இவர் லண்டனின் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசைத்துறை உரிமம் பெற்றவர். இவர் 'ரைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள சிம்பொனியை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் புகழ்பெற்ற செரிமோனியல் அரங்கில் வருகிற 27ம் தேதி அரங்கேற்றுகிறார். சிம்பொனியை அந்தோணி ஆர்மோர் வழி நடத்துகிறார்.
இதுகுறித்து கணேஷ் பி.குமார் கூறும்போது 'இந்த சிம்பொனியை 2020ம் ஆண்டில் திட்டமிட்டோம். கொரோனா காலம் வந்து விட்டதால் அப்போது அரங்கேற்ற முடியவில்லை. காலம் கனிந்து வந்திருப்பதால் இப்போது நடத்துகிறோம்" என்றார்.