ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தமிழின் முன்னணி இயக்குனரான அட்லி, ஹிந்திக்குச் சென்று ஷாரூக்கான் ஹீரோவாக நடித்த 'ஜவான்' படத்தை இயக்கினார். அந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்திற்குப் பின்பு, சல்மான் கான் நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகாமல் அப்படியே முடங்கிவிட்டது. அதன்பின் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க அட்லி இயக்க ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசுகையில், “அட்லி ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் கதையை எழுதினார். பட்ஜெட்டின் காரணமாக படம் இப்போது தாமதம் ஆகியுள்ளது. படத்தில் இருக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெரிய கூட்டணிகள் நடக்க சரியான கதை தேவை. இப்போது நான் எனது அடுத்த படத்திற்குச் சென்றுவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அட்லி, அல்லு அர்ஜுன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.