விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்த, நன்கு தமிழ் பேசத் தெரிந்த அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குனர் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இதனால், அவரை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த சில தெலுங்கு இயக்குனர்கள் வருத்தத்தில் உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.
திரிவிக்ரம் சீனிவாஸ் படத்தில் நடிக்க இருந்த அல்லு அர்ஜுன், திடீரென அட்லி இயக்கத்தில் நடிக்க சம்மதித்து படமும் ஆரம்பமாகிவிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் என டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக திரிவிக்ரம், அல்லு அர்ஜுன் தரப்பில் அவர்களது அடுத்தடுத்த படங்கள் பற்றிய செய்திகளை பரவவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள அட்லியை அல்லு அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். “கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள அட்லி காருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் ஆர்வமும், கலையும் இந்த அளவில் கொண்டாடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.