ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' படம் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. படத்தைப் பாராட்டி பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனும் பாராட்டியுள்ளார். பொதுவாக சிறிய பதிவுகளை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்திற்காக நீண்ட பதிவிட்டுப் பாராட்டியுள்ளார்.
“மிராய் குழுவிற்கு வாழ்த்துகள். உணர்ச்சியுடனும், உணர்வுடனும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர் தேஜா சஜ்ஜா, உங்கள் உடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மரியாதை. இது போன்ற திரைப்படத்தை உருவாக்கியதற்குப் பெரிய பாராட்டு. மஞ்சு மனோஜ் நீங்கள் அசத்திவிட்டீர்கள். ரித்திகா நாயக்கின் இனிமையான இருப்பும், அன்பான ஸ்ரியா சரண், ஜெபகதிபாபு காரு, மற்றும் பிறரின் சக்தி வாய்ந்த இருப்பும் பாராட்டுக்குரியது.
இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பம் அற்புதம். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டு. குறிப்பாக சிஜி குழு, கலை, மிக்சிங் மற்றும் கவுர ஹரியின் பயமுறுத்தும் இசை. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனியின் சினிமா பார்வைக்கு மரியாதை. மிகவும் பாராட்டத்தக்க வேலை. புதிய யுக வணிக இயக்குனருக்கான அடையாளம். பெரிய வாழ்த்துகள் தயாரிப்பாளருக்கு,” எனப் பாராட்டியுள்ளார்.