மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வாரிசு நடிகர்கள் உள்ள குடும்பம் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். அவரது மாமனார் தொடங்கி, சகோதரிகள் குடும்பம், அவரது குடும்பம் என நிறைய பேர் திரையுலகில் உள்ளனர்.
ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த வருடம் நடந்த போது, சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் மகனான நடிகர் அல்லு அர்ஜுன் செய்த ஒரு பிரச்சாரத்தால் சர்ச்சை எழுந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் கடுமையாக எதிர்த்து வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தார். அந்த வேட்பாளர் அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பர்.
தேர்தல் முடிந்து பவன் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்த அந்த வேட்பாளர் தோல்வியடைந்தார். அதன்பின் அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள்.
இதனிடையே, அல்லு அர்ஜுனின் பாட்டி சில தினங்களுக்கு முன் இறந்த போது பவன் கல்யாண் அவர்களது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். இன்று பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனால், இருவருக்குமான மனஸ்தாபம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.