பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
தமிழ் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா. 'பள்ளத்தூர் பாப்பா'வாக அன்று நாடகங்களில் கொடிகட்டிப் பறந்த இவர், கவியரசர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளிவந்த “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நட்சத்திரமாக அறிமுகமானார். சிறு சிறு வேடமேற்று நடித்துக் கொண்டிருந்த இவர், சிருங்கார நாயகியாக அறிமுகமானதன் பின்னணி அலாதியான ஒன்று.
இயக்குநர் ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தபோது, அப்படத்தின் கலைஞர்களும், டெக்னீஷியன்களும் திருச்சூரில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதில் சில கலைஞர்கள் அருகிலுள்ள குருவாயூர் கோயிலுக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசித்த போது, அக்கோயிலைச் சுற்றிச் சிறு சிறு விளக்குகள் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு விளக்கம் கேட்க, வரும் பக்தர்கள் ஏதாவது வேண்டிக் கொண்டு அது பலித்துவிட்டால், இந்த விளக்குகளுக்கு எண்ணை ஊற்றி, திரி இட்டு ஏற்றி வைப்பார்கள் என அங்குள்ள ஒருவர் விளக்கமளித்தார்.
'குருவாயூரப்பா!' நான் இறக்கும் முன் என் மகள் ஒரே ஒரு படத்திலாவது கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதற்கு உன் அருள் வேண்டும். அவ்வாறு நடந்து விட்டால் இங்குள்ள விளக்குகளுக்கு எண்ணை ஊற்றி, திரி இட்டு ஏற்றி வைக்கின்றேன் என நடிகை மனோரமாவின் தாயார் வேண்டிக் கொள்ள, படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்த அன்று, நடிகை மனோரமாவிற்கு “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. கடிதத்தில் உன்னை எங்களது அடுத்த படமான “கொஞ்சும் குமரி”யில் நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். உடனே வந்து சந்திக்கவும் என அந்நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான ஆர் சுந்தரம் எழுதியிருந்தார். அதன்படி நேரில் சென்று சந்தித்து “கொஞ்சும் குமரி” திரைப்படத்தின் நாயகியானார் 'ஆச்சி' மனோரமா அந்த குருவாயூரப்பன் அருளால்.