திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கார்த்தி நடிப்பில் கடைசியாக ‛மெய்யழகன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அவருடன் அரவிந்த்சாமி நடிக்க, பிரேம் குமார் இயக்கினார். இந்த படத்திற்கு பின் தற்போது ‛வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் கைதி 2 படமும் அவர் கைவசம் உள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு கதையை கார்த்தியிடம் சொல்லி உள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதாம். இதனால் படம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர துவங்கி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தான் கவுதம் மேனன் படமாக்க உள்ளாராம். வழக்கமான கவுதம் மேனன் ஸ்டைலில் ஆக் ஷன் படமாக இது உருவாகிறது.