கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஒரு டானாக தோன்றும் அஜித் குமார், பின்னர் அந்த வன்முறை வாழ்க்கையில் இருந்து விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் நேரத்தில் கடந்த காலத்தில் அவர் செய்த வன்முறை சம்பவங்கள் மீண்டும் அவரை துரத்துவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முடிவெடுப்பாராம். ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த அத்தனை பிரச்னைகளும் ஒன்று சேர்ந்து அவரை துரத்த, மீண்டும் அவர் கேங்ஸ்டராகவே மாறுவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ என்ற இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. என்றாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த படங்கள் திரைக்கு வரும் போது தான் தெரியவரும்.