பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கடந்த சில வருடங்களாகவே தென் இந்தியாவில் வெளியாகும் பல திரைப்படங்கள், பாலிவுட்டின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. பல பாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையே பெரிய பாக்கியம் என்பது போன்று பேசி வருகிறார்கள். கடந்த வருடம் 'லாப்பட்டா லேடீஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சிறப்புகள் குறித்து பேசிய அவர், அதே சமயம் தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.
“தென்னிந்திய படங்கள் குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் கதைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, மேலும் பல பரிசோதனை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் ஒரு ஹாரர் படமாக சொல்லப்பட்ட விதமும் அதில் மம்முட்டியின் நடிப்பும் ரொம்பவே பிரமிக்க வைத்தது. அதே சமயம் தென்னிந்திய படங்கள், அவர்களது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சமைத்து கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் அப்படி அல்ல.. அதன் எல்லை ரொம்பவே பெரியது” என்று கூறியுள்ளார்.