நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவர் நடித்த படம் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. பிசியான நடிகையாக இருக்கும் இவர் நடிப்பில் அடுத்ததாக 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று தனது பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார்.
ஆனால் அதை மறுத்த அனஸ்வரா ராஜன், “இயக்குனர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து என்னுடைய படங்களை பார்த்தால் அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நான் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன் விவரங்கள் குறித்து எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
அதே சமயம் தன்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்ததற்காக இயக்குனர் தீபு கருணாகரன் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் அனஸ்வரா ராஜன். இந்த நிலையில் நடிகர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இவர்கள் இருவரையும் அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சுமூகமாக தீர்வு வழங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் அனஸ்வரா ராஜன்.