‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவர் நடித்த படம் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. பிசியான நடிகையாக இருக்கும் இவர் நடிப்பில் அடுத்ததாக 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று தனது பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார்.
ஆனால் அதை மறுத்த அனஸ்வரா ராஜன், “இயக்குனர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து என்னுடைய படங்களை பார்த்தால் அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நான் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன் விவரங்கள் குறித்து எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
அதே சமயம் தன்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்ததற்காக இயக்குனர் தீபு கருணாகரன் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் அனஸ்வரா ராஜன். இந்த நிலையில் நடிகர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இவர்கள் இருவரையும் அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சுமூகமாக தீர்வு வழங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் அனஸ்வரா ராஜன்.