என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கடந்த சில வருடங்களாகவே தென் இந்தியாவில் வெளியாகும் பல திரைப்படங்கள், பாலிவுட்டின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. பல பாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையே பெரிய பாக்கியம் என்பது போன்று பேசி வருகிறார்கள். கடந்த வருடம் 'லாப்பட்டா லேடீஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சிறப்புகள் குறித்து பேசிய அவர், அதே சமயம் தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.
“தென்னிந்திய படங்கள் குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் கதைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, மேலும் பல பரிசோதனை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் ஒரு ஹாரர் படமாக சொல்லப்பட்ட விதமும் அதில் மம்முட்டியின் நடிப்பும் ரொம்பவே பிரமிக்க வைத்தது. அதே சமயம் தென்னிந்திய படங்கள், அவர்களது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சமைத்து கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் அப்படி அல்ல.. அதன் எல்லை ரொம்பவே பெரியது” என்று கூறியுள்ளார்.