ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றியைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த படமாக கிட்டத்தட்ட 1800 கோடிக்கு மேல் வசூலித்தது. அது மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி வட மாநிலங்களிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஓடிடி தளத்தில் வெளியான போது ஆங்கில மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்(லாந்து) என ஐந்து மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஓடிடியில் புஷ்பா 2வை வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த படம் இன்னும் அதிக அளவிலான ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல அடுத்தடுத்து வெளியாக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூவையும் உருவாக்கித் தரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.