புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
35 வருடங்களை தாண்டி தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். ஒரு பக்கம் இயக்குனராக வித்தியாசமான படைப்புகளை தந்து, சில சமயம் சறுக்கலை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் நடிகராக அதை சமன் செய்து தொடர்ந்து பயணப்பட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பார்த்திபன். இதற்குமுன் 2012ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ரச்சா' என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ள பார்த்திபன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கடந்த 2001ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த பார்த்திபன், அவர் பிறகு 2011ல் வெளியான 'மேல் விலாசம்' என்கிற படத்தில் கதையின் நாயகனாகவும் 2013ல் வெளியான 'எஸ்கேப் பிரம் உகாண்டா' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு 'மிஸ்டர் டுமீல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.