தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது, ''நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு அஜித் சாருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன். அது நடைபெறும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.