ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது, ''நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு அஜித் சாருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன். அது நடைபெறும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.