காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் |

நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகு கடந்த சில மாதங்களாகவே அது குறித்த செய்திகளில் தான் பரபரப்பாக அடிபட்டு வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அவர் நடித்து வந்த தண்டேல் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வந்தது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கடல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டும் ஆந்திர மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாயகன் நாகசைதன்யா உள்ளிட்டவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நடைபெற்றபோது அங்கே ரோந்து வந்த கேரள கப்பற்படை அதிகாரிகள் தண்டேல் படக்குழுவினரை கைது செய்து அழைத்துச் சென்றனராம். அதன் பிறகு அவர்களை விசாரித்து விடுவித்துள்ளனர். இந்த தகவலை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.




