ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகு கடந்த சில மாதங்களாகவே அது குறித்த செய்திகளில் தான் பரபரப்பாக அடிபட்டு வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அவர் நடித்து வந்த தண்டேல் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வந்தது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கடல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டும் ஆந்திர மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாயகன் நாகசைதன்யா உள்ளிட்டவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நடைபெற்றபோது அங்கே ரோந்து வந்த கேரள கப்பற்படை அதிகாரிகள் தண்டேல் படக்குழுவினரை கைது செய்து அழைத்துச் சென்றனராம். அதன் பிறகு அவர்களை விசாரித்து விடுவித்துள்ளனர். இந்த தகவலை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.