‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். குறிப்பாக திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்றவர். சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து படம் இயக்காமல் ஆசிப் அலி, பஷில் ஜோசப் போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களையும் தொடர்ந்து படம் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் நுணக்குழி என்கிற காமெடி திரைப்படத்தை திரில்லிங் கலந்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலி நடித்து வரும் மிராகே என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இதற்கிடையே திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை உருவாக்கும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஜீத்து ஜோசப். கடந்த 2013ல் பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற படம் மூலம் இயக்குனர் ஆனவர் தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிரித்விராஜை வைத்து ஊழம் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறத் தவறியது. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட நாயகன் ஆன பிரித்விராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் ஜீத்து ஜோசப்.