சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். குறிப்பாக திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்றவர். சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து படம் இயக்காமல் ஆசிப் அலி, பஷில் ஜோசப் போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களையும் தொடர்ந்து படம் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் நுணக்குழி என்கிற காமெடி திரைப்படத்தை திரில்லிங் கலந்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலி நடித்து வரும் மிராகே என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இதற்கிடையே திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை உருவாக்கும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஜீத்து ஜோசப். கடந்த 2013ல் பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற படம் மூலம் இயக்குனர் ஆனவர் தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிரித்விராஜை வைத்து ஊழம் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறத் தவறியது. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட நாயகன் ஆன பிரித்விராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் ஜீத்து ஜோசப்.




