ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். குறிப்பாக திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்றவர். சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து படம் இயக்காமல் ஆசிப் அலி, பஷில் ஜோசப் போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களையும் தொடர்ந்து படம் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் நுணக்குழி என்கிற காமெடி திரைப்படத்தை திரில்லிங் கலந்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலி நடித்து வரும் மிராகே என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இதற்கிடையே திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை உருவாக்கும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஜீத்து ஜோசப். கடந்த 2013ல் பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற படம் மூலம் இயக்குனர் ஆனவர் தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிரித்விராஜை வைத்து ஊழம் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறத் தவறியது. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட நாயகன் ஆன பிரித்விராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் ஜீத்து ஜோசப்.