Advertisement

சிறப்புச்செய்திகள்

வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா | காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்?

08 பிப், 2025 - 01:06 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Why-did-Sridevi-not-get-a-national-award-for-the-moondram-pirai-movie

1982ம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட படம் 'மூன்றாம் பிறை'. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க்ஸ் ஸ்மிதா நடித்த படம். திரையுலகம் அதுவரை சந்திக்காத ஒரு கதையை கொண்ட படமாக வெளிவந்தது. நாகரீக பெண்ணான ஸ்ரீதேவி ஒரு விபத்தில் சிக்கி 10 வயது சிறுமியின் வாழ்க்கைக்கு வந்து விடுகிறார். அவரை பள்ளி ஆசிரியர் கமல்ஹாசன் வளர்க்கிறார். ஸ்ரீதேவியின் பெற்றோருக்கு விபரம் தெரிந்து அவரை அழைத்துச் செல்ல வருகிறார்கள், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை.

இந்த படத்திற்கு 30வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர் கமல்ஹாசன், சிறந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்ற இரண்டு விருதுகள் கிடைத்தன. படத்தில் பிரமாதமாக நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கிடைத்தது கமல்ஹாசனுக்கு. கதைப்படி ரயில் நிலையத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி தவிர படத்தில் கமலுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது ஸ்ரீதேவி புறக்கணிக்கப்பட்டு கமலுக்கு வழங்கப்பட்டது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இதுகுறித்து அளித்த விளக்கத்தில் “ஆண் நடிகர்கள் என்ற கேட்டகிரியில் கமல்ஹாசன் முன்னணியில் இருந்தார். படம் முழுக்க அன்பை மனதில் தேக்கி வைத்து அதை கிளைமாக்சில் வெளிப்படுத்திய விதத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பெண் நடிகைகளுக்கான பிரிவில் ஸ்ரீதேவி பிரமாதமாக நடித்திருந்தாலும், அவரை விட 'அர்த்' படத்தில் ஷபனா ஆஸ்மி சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது.

என்றாலும் சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி என 6 விருதுகளும் வழங்கப்பட்டன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனைபிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : ... கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in