இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் வசதியுடன் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகள் அனைத்தும் அன்றைய கால கட்டத்திலேயே சிறிய அளவில் செய்யப்பட்டுள்ளது. 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா 2 வேடங்களில் நடித்தார். இரண்டு சின்னப்பாக்கள் ஒரே பிரேமில் தோன்றி நடித்தது அன்றைய தொழில்நுட்ப சாதனையாக இருந்தது. மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மக்களை வியக்க வைத்தது 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஜெகதலபிரதாபன்' என்ற படத்தில் ஒரே பிரேமில் 5 பி.யு.சின்னப்பா தோன்றியதுதான். கதைப்படி அவர் ஒரு இசை கச்சேரி நடத்துவார். அந்த கச்சேரியில் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, ஜால்ரா, தப்பு என 5 இசை கருவிகளை பயன்படுத்தி அவரே அனைத்துமாய் அந்த கச்சேரியை நடத்துவார். இது அன்றைக்கு ஆச்சர்யப்பட வைத்தது. 80 வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை மேனுவலாக சாதித்து காட்டியது தமிழ் சினிமா.
பின்னாளில் 'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலில் சிவாஜி இப்படி நடித்திருப்பார். 'நவராத்திரி' படத்தில் 9 சிவாஜி ஒரே பிரேமில் வருவார்கள். ஜெகதலபிரதாபன் படத்தை எஸ்.எம்.ஸ்ரீமுலு நாயடு இயக்கினார். வி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்திருந்தது.