ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் வசதியுடன் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகள் அனைத்தும் அன்றைய கால கட்டத்திலேயே சிறிய அளவில் செய்யப்பட்டுள்ளது. 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா 2 வேடங்களில் நடித்தார். இரண்டு சின்னப்பாக்கள் ஒரே பிரேமில் தோன்றி நடித்தது அன்றைய தொழில்நுட்ப சாதனையாக இருந்தது. மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மக்களை வியக்க வைத்தது 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஜெகதலபிரதாபன்' என்ற படத்தில் ஒரே பிரேமில் 5 பி.யு.சின்னப்பா தோன்றியதுதான். கதைப்படி அவர் ஒரு இசை கச்சேரி நடத்துவார். அந்த கச்சேரியில் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, ஜால்ரா, தப்பு என 5 இசை கருவிகளை பயன்படுத்தி அவரே அனைத்துமாய் அந்த கச்சேரியை நடத்துவார். இது அன்றைக்கு ஆச்சர்யப்பட வைத்தது. 80 வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை மேனுவலாக சாதித்து காட்டியது தமிழ் சினிமா.
பின்னாளில் 'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலில் சிவாஜி இப்படி நடித்திருப்பார். 'நவராத்திரி' படத்தில் 9 சிவாஜி ஒரே பிரேமில் வருவார்கள். ஜெகதலபிரதாபன் படத்தை எஸ்.எம்.ஸ்ரீமுலு நாயடு இயக்கினார். வி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்திருந்தது.