குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

இன்றைக்கு தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் வசதியுடன் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகள் அனைத்தும் அன்றைய கால கட்டத்திலேயே சிறிய அளவில் செய்யப்பட்டுள்ளது. 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா 2 வேடங்களில் நடித்தார். இரண்டு சின்னப்பாக்கள் ஒரே பிரேமில் தோன்றி நடித்தது அன்றைய தொழில்நுட்ப சாதனையாக இருந்தது. மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மக்களை வியக்க வைத்தது 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஜெகதலபிரதாபன்' என்ற படத்தில் ஒரே பிரேமில் 5 பி.யு.சின்னப்பா தோன்றியதுதான். கதைப்படி அவர் ஒரு இசை கச்சேரி நடத்துவார். அந்த கச்சேரியில் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, ஜால்ரா, தப்பு என 5 இசை கருவிகளை பயன்படுத்தி அவரே அனைத்துமாய் அந்த கச்சேரியை நடத்துவார். இது அன்றைக்கு ஆச்சர்யப்பட வைத்தது. 80 வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை மேனுவலாக சாதித்து காட்டியது தமிழ் சினிமா.
பின்னாளில் 'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலில் சிவாஜி இப்படி நடித்திருப்பார். 'நவராத்திரி' படத்தில் 9 சிவாஜி ஒரே பிரேமில் வருவார்கள். ஜெகதலபிரதாபன் படத்தை எஸ்.எம்.ஸ்ரீமுலு நாயடு இயக்கினார். வி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்திருந்தது.