ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் தண்டேல் என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்று நாக சைதன்யாவுக்கு கம்பேக் படம் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த நிலையில் இணையதளத்தில் இந்த படம் லீக் ஆனது ஒரு பக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது என்றால், ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆந்திர அரசு போக்குவரத்து கழக சேர்மனுக்கு அளித்துள்ள புகாரில், “ஆந்திர அரசு பேருந்தில் தண்டேல் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது முறையற்ற செயல் மட்டுமல்ல. அராஜகமான, சகிக்க முடியாத செயலும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்திற்கு பின்னணியில் இருந்து கடுமையாக உயிரைக் கொடுத்து உழைத்த ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை அவமரியாதை செய்யும் விதமாக இருக்கிறது. தயவு செய்து இந்த முறையற்ற செயலில் இறங்கியவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.