ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

1960, 70களில் வெற்றி பெற்ற நாடகங்களை படமாக்குவது வழக்கமாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த யுனைனெட் அமெச்சசூர் நாடக குழு நடத்தி வந்த பல நாடகங்கள் திரைப்படமாகி இருக்கிறது. இந்த குழுவின் கண்ணன் வந்தான் நாடகம் சிவாஜி நடிப்பில் 'கௌரவம்' திரைப்படமாக வெளிவந்து வெற்றி பெற்றது . மேஜர் சந்திரகாந்த், தங்கபதக்கம், வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு இப்படி பல நாடகங்கள் திரைப்படமானது.
இந்த வரிசையில் ஒய்.ஜி மகேந்திரன் தற்போது நடத்தி வரும் 'சாருகேஷி' என்ற நாடகம் திரைப்படமாகி உள்ளது. இந்த நாடகத்தை பார்த்த ரஜினிகாந்த் இதனை திரைப்படமாக தயாரிக்குமாறு சொன்னதை தொடர்ந்து இப்போது அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாடகத்தில் சாருகேஷி கேரக்டரில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன் படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரனின் பேரன் ரித்விக் இளம் வயது சாருகேசியாக நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, சமுத்திரகனி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். பாட்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார்.
சாருகேஷி என்பது ராகத்தின் பெயர். சாருகேசியின் இசைக்கு மயங்காத இசைபிரியர்கள் இல்லை இவர் மேடை ஏறினால் தாள சத்ததை மீறி கைதட்டல் காதை பிளக்கும். இவர் ஆலாபனை பண்ணாத ராகங்களே கிடையாது . இப்படிபட்ட மனிதர் அல்சைமர் எனும் மறதி நோய்க்கு உள்ளாகிறார். இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் மனைவி மக்கள் நண்பர்கள் என் அனைவரைம் மறந்து தன்னையே யார்? என்று தெரியாமல் மறந்து விடுவார்கள். இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளான சாருகேஷியின் நிலைமை என்ன ? என்பதுதான் இதன் கதை.